Summary: "என்னை யாராவது வெளியிலிருந்து இயக்குகிறார்களா? அப்படி இயக்குவது கடவுளா? அல்லது வேறு ஏதேனும் ஒரு சக்தியா?" என்று தனக்கே உரிய நகைச்சுவை நடையில் திரு.கிரேஸி மோகன் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு அளிக்கும் பதிலானது, "நான் யார்" என்பதை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழமாகவும் தெளிவாகவும் எடுத்துரைப்பதாய் அமைகிறது.